Posts

Showing posts from June 10, 2025
Image
 14,582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு வெளியீடு பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்? மத்திய அரசில் வேலைக்கு செல்ல வேண்டும் என விருப்பமுள்ளவரா?  2025-ம் ஆண்டில் உங்கள் கனவு நினைவாக சூப்பரான வாய்ப்பு அமைந்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வின் மூலம் நிரப்பும், மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) பட்டப்படிப்பு தகுதிக்கான CGL தேர்வு (SSC CGL 2025) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள குரூப் சி மற்றும் பி பதவிகள் இந்தாண்டு நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு முத்தவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் பணி செய்ய வாய்ப்பு இதோ. மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) பட்டத்தாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 14,582 காலிப்பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்க தொடங்கலாம். ஜூன் 9 முதல் தொடங்கப்பட்ட விண்ணப்பப்பதிவு வரும் ஜூலை 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்...
Image
ஜூன் 28, 29 தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்.ஐ. தேர்வு ஒத்திவைப்பு. தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (SI) தேர்வு 2025 ஜூன் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறவிருந்தது, ஆனால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,299 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பணியில் உள்ள காவலர்களுக்கு 20% ஒதுக்கீடு, பொதுமக்களுக்கு 80% ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகளுக்கும் தனித்தனி தேர்வுகள் நடைபெற உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பால் சீனியாரிட்டி வழங்கும் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக TNUSRB தெரிவித்துள்ளது. உதவி ஆய்வாளர் தேர்வு தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணம்! தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (SI) பணிக்கான எழுத்துத்தேர்வு, எதிர்வரும் 2025 ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்த தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக கடந்த ஏ...
Image
  அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது: ஆட்சியரிடம் இடைநிலை ஆசிரியா்கள் மனு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என இடைநிலை ஆசிரியா் பணி நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் கடலூா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இடைநிலை ஆசிரியா் பணி தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளித்தனா். மனு விவரம்: 21.7.2024 அன்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் பணி நியமன தோ்வை மாநிலம் முழுவதும் 25,606 போ் எழுதினா். ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்த 2,768 காலிப்பணியிடங்கள் 12 ஆண்டுகளாக பணிவாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியா்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை காலிப் பணியிடங்களை நிரப்பாமல் 2013, 2017, 2019, 2022ஆம் ஆண்டுகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு மட்டும் நடத்தப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு ஆசிரியா் பணித் தோ்வை நம்பி காத்திருந்த நிலையில், தற்போது 40 முதல் 50 வயதைக் கடந்த எங்களுக்கு 2,768 பணியிடங்கள் என்பது மிகச் சொற்பமானது. கடந்த 12 ஆண்டுகளில் 15 ஆயிரத...
Image
  காலிப் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கண்களில் சிவப்பு துணியை கட்டிக் கொண்டு பட்டதாரி ஆசிரியா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்து வீட்டுமனை பட்டா, கடனுதவி, சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 322 கோரிக்கை மனுக்களை பெற்றாா். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா்கள் அளித்த கோரிக்கை மனு: கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் நியமன தோ்வினை தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினோம். தற்போது ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள் மிகவும் குறைவானது. இதனால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தற்போது வரை உள்ள முழு காலிபணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை அளித்தனர்.