
2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: பொறியியல் படிப்புக்கு ஜூன் 27-ல் தரவரிசை பட்டியல் பொறியியல் படிப்புக்கு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது. தரவரிசை பட்டியல் ஜூன் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 தேதி தொடங்கி ஜூன் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது. மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 883 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கடைசி நாள் நிலவரப்படி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய மாணவர்களில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 359 பேர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்...