Posts

Showing posts from June 9, 2025
Image
  2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: பொறியியல் படிப்புக்கு ஜூன் 27-ல் தரவரிசை பட்டியல் பொறியியல் படிப்புக்கு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது. தரவரிசை பட்டியல் ஜூன் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 தேதி தொடங்கி ஜூன் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது. மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 883 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கடைசி நாள் நிலவரப்படி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய மாணவர்களில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 359 பேர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்...
Image
  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் டிஆர்பி தீவிரம் அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. திட்டமிட்டபடி தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு யுஜிசி சார்பிலும் செட் தகுதித் தேர்வு அந்தந்த மாநில அளவிலும் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்ட 'செட்' தகுதித்தேர்வு முடிவு ஏறத்தாழ 3 மாதங்கள் ஆகியும் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. செட் தேர்வு முடிவு வந்தவுடன் அடுத்தகட்டமாக உதவி பேராசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பித்ததவர்கள் அதற்காக முழு மூச்சில் தயாராகி வரும் நிலையில், செட் தேர்வுக்கான முடிவு அறிவிக்கப்படாமல் இருப்பது அவர்களை...