பிளஸ் 1 தேர்வு மே 30ல், 'ரிசல்ட்'

பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

செய்முறை தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.புதிய விதிகளின்படி, தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 1 பொது தேர்வு, இன்று துவங்குகிறது. இதில், 8.61 லட்சம் மாணவர்களும், 1,753 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக, தமிழகம், புதுச்சேரியில், 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog