தமிழக மாணவ, மாணவிகள் எப்போதும் 14417 என்ற எண்ணை அழைக்கலாம்.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!!!


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது.


அதனால் ஒரு சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.


அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் உதவி எண் 14417- ஐ அழைக்கலாம் என்று கூறியுள்ளார்.கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த நிலையில் அமைச்சர் இதைக் கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog