செப்.25 முதல், அரசு கல்லூரிகளில் எம்எட் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்!





தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு எம் எட் (M.Ed.) சேர்வதற்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.


இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 


"தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் 

பட்டப்படிப்பு எம்.எட்., (Master of Education - M.Ed.) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023 - 2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.60 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும்.


இது தொடர்பான கூடுதல் விபரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 


விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் முறை, UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.


இணையதள வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 25.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை (DD) மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். 


மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in இணையதளம் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். 


மேலும் 93634 - 62070, 93634 - 62007, 93634 - 62042, 93634 - 62024 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog