ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு நடுநிலைப் பள்ளியிலும் பயிற்சி




ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் படித்து பயிற்சி பெறுவதற்கு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அருகில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கும் அனுப்பலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



: பி.எட் மற்றும் எம்எட், பிஎச்டி பட்டப்படிப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழம் வழங்கி வருகிறது. ஆசிரியர் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட நாட்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.


பள்ளிக்கல்வித்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் 24 மாவட்டங்களில் 2,200 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.


இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், பி.எட் மற்றும் எம்எட் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். இப்பயிற்சி மாணவர்களுக்கு பள்ளிகளை அந்தந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒதுக்கீடு செய்தனர். நடப்பு கல்வியாண்டு முதல் இந்த ஒதுக்கீடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுடன் பள்ளிக்கல்வித்துறையால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலில் தேவைப்படும் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர் பயிற்சி மாணவர்களை அருகில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு கற்றல், கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும் இவர்களுக்கான பயிற்சி சான்றிதழை தலைமை ஆசிரியரே வழங்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog