Posts

Showing posts from June 15, 2025
Image
  குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் சொன்ன தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று (ஜூன் 15) நடத்தப்படும் குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன்படி, "சென்னையில் ஏறத்தாழ 170 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சுமார் 200 முதல் 300 தேர்வர்கள் இருப்பார்கள். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இரண்டு மாதத்திற்குள்ளாக வெளியிடப்படும். அதில் இருந்து மூன்று மாதத்திற்குள் மெயின் தேர்வு நடைபெறும். 72 பணிகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி மூலமாக கடந்த ஆண்டில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்றைய தேர்வில் எளிமைப்படுத்தப்பட்ட ஓ.எம்.ஆர்...
Image
  தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல் ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா?என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் நடப்பாண்டில் தொடங்கப்படவுள்ள நிலையில், அந்தப் படிப்புகளை நடத்துவதற்காக 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  பொதுவாக கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் துறைகளில் முதல் கட்டமாக 3 ஆசிரியர்களாவது நியமிக்கப்பட வேண்டும் என்ற குறைந்தபட்சத் தேவையைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டில் உள்ள 57 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 203 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, அப்படிப்புகளில் 10,396 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 43 கல்லூரிகளில் 49 புத...
Image
  1,910 பணியிடங்கள்.. தமிழ்நாடு மின்வாரியத்தில் ITI , Diploma படிச்சிருந்தாலே விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு தொழில்நுட்பப் பதவிகளில் மொத்தம் 1,910 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ். கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் உட்பட 58 வகையான பதவிகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 12, 2025 ம் தேதிக்குள் www.tnpsc.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுகள் கணினி மூலம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 , செப்டம்பர் 11 முதல் 15 ம் தேதி வரை நடைபெறவுள்ளன. கல்வித் தகுதி : ITI மற்றும் டிப்ளமா தகுதியுடன் கூடிய தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான வாய்ப்பாகும். தேர்வு, துறை வாரியாக வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு கருவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் மட்டும் 656 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. அத்துடன் ...