
குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் சொன்ன தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று (ஜூன் 15) நடத்தப்படும் குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன்படி, "சென்னையில் ஏறத்தாழ 170 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சுமார் 200 முதல் 300 தேர்வர்கள் இருப்பார்கள். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இரண்டு மாதத்திற்குள்ளாக வெளியிடப்படும். அதில் இருந்து மூன்று மாதத்திற்குள் மெயின் தேர்வு நடைபெறும். 72 பணிகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி மூலமாக கடந்த ஆண்டில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்றைய தேர்வில் எளிமைப்படுத்தப்பட்ட ஓ.எம்.ஆர்...