நீட் தேர்வில் 720/720 மதிப்பெண்கள் பெற்று விழுப்புரம் மாணவன் சாதனை



நீட் தேர்வில் 720/720 மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.



இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று இரவு வெளியானது. அதில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஷின் மகன் பிரபஞ்சன் நீட் தேர்வு முடிவில் 720/720 பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சன் முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


அதுமட்டுமின்றி, முதல் இடம், 3-வது இடம், 6வது இடம் & 9-வது இடத்தை தமிழ்நாட்டு மாணவர்களே பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கௌஸ்டவ், சூர்யா சித்தார்த், வருன் ஆகியோர் முறையே 3, 6 மற்றும் 9வது இடத்தை பிடித்துள்ளார்கள். அதாவது தேசிய அளவில் நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 1,44,516 லட்சம் பேர் இத்தேர்வை எழுதிய நிலையில் 78,693 பேர் தகுதி பெற்றுள்ளனர்.


Comments

Popular posts from this blog