பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர்கள் பேரணி திருச்சி : " பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ' பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் திருச்சியில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர் . தமிழ்நாடு பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் , கவன ஈர்ப்பு பேரணி நேற்று திருச்சியில் நடந்தது . பேரணிக்கு மாநில பொதுச் செயலாளர் சேத்துராஜா தலைமை வகித்தார் . சிறப்பு அழைப்பாளராக கடலூர் பகுதி தலைவர் செந்தில்குமார் பங்கேற்று பேசினார் . கால முறை ஊதியம் வழங்க வேண்டும் . அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை , முழு நேர பணியாளராக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . கவுன்சிலிங் மூலம் பணி இடமாற்றம் அளிக்க வேண்டும் . மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யாமல் , மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றம் அளிக்க வேண்டும் . கோடை விடுமுறை காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும் . மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் . மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த பேரணி , திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் துவங்கி , கலெக்டர் அலுவலகம் சென்றடைந்தது . அங்கு கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிம் அளித்தனர் . பேரணியில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர் . சங்க தலைவர் குமரேசன் நன்றி கூறினார் .

Comments

Popular posts from this blog