Posts

Showing posts from July 22, 2025
Image
  டி.எ.ன்.பி.எஸ்.சி கேள்வித்தாள்கள் இனி தாசில்தார் கைகளுக்கு செல்லாது: தலைவர் எஸ்.கே. பிரபாகர் அறிவிப்பு தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய நடைமுறை மாற்றங்களை அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 12 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 4 தேர்வைத் தொடர்ந்து, விடைத்தாள்கள் அடங்கிய கட்டுகள் உடைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் குறித்து இன்று விளக்கமளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர், "தேர்வு முடிவடைந்ததும் ஜூலை 14 அன்று விடைத்தாள்கள் அனைத்தும் ட்ரங்குப் பெட்டிகளில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. விடைத்தாள்கள் முழுமையாகப் பாதுகாப்பான முறையில் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளன, எங்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். உடைக்கப்பட்ட பெட்டிகளில் வேறு ஆவணங்கள் இருந்திருக்கலாம் என்றும், என்ன ஆவணங்கள் இருந்தன, எங்கே உடைக்கப்பட்டது, இதற்கு யார...
Image
  அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 காலிப்பணியிடங்கள் : அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் 574 காலிப்பணியிடங்களுக்கான தற்காலிக நியமனத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு. TNGASA இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமிப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. உயர்கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் மாணவர்களின் கற்றல் செயல்முறையை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இந்த நியமனங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையிலானவை மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்ய விரிவான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் கல்லூரிக் கல்வி இயக்ககத்தால் வெளியிடப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tngasa.org என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வ...