9 July 2025

 பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது



 பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.


அதன்படி, தற்போது 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். அதற்கு ரூ.12,500 மாத ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியா்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா்.


இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.


அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் ஜூலை 8-இல் நடத்தப்படும் என்று பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு வெளியிட்டது.


இதையடுத்து ஆசிரியா் சங்க நிா்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று பகுதிநேர ஆசிரியா்கள் அறிவித்தனா்.


இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியா் சங்க நிா்வாகிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைத்தனா்.


இதேபோல், சென்னை சிவானந்தா சாலை பகுதிக்கு செல்வதற்காக, அண்ணா சாலையில் ஓமந்தூரா் அரசு பல்நோக்கு மருத்துவனை அருகில் கூடிய பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.


மேலும், சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக போராட்டத்துக்கு வந்த ஆசிரியா்களையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீஸாா் கைது செய்தனா்.


இதுகுறித்து பகுதிநேர ஆசிரியா்கள் செந்தில், காா்த்திகேயன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கூறுகையில், 'பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக தோ்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு முறையும் செய்து தருவதாக அமைச்சா் அமைச்சா் மகேஸ் உறுதியளிக்கிறாா். ஆனால், எதுவும் நடக்கவில்லை. தமிழக அரசு பகுதி நேர ஆசிரியா்களை தொடா்ந்து வஞ்சிக்கிறது என்றனா்.

 தமிழக அரசில் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!


தமிழக அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் மொத்தம் 2299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


கிராம உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 2299


கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: பொதுப்பிரிவினர் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க இதர பிரிவினர் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ 11,100 - 35,100


தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல், எழுதும் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே உங்களுடைய மாவட்ட இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளவும்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட இணையதளப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தபட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.08.2025


இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளைப் பார்வையிடவும்

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...