Posts

Showing posts from October 13, 2025
Image
  பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! அடுத்த ஆண்டு ஜனவரி, ஜூலை, டிசம்பர் என 3 மாதங்களில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும். சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களும் டெட் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இது தொடர்பாக தமிழக அரசு முறையான வழிகாட்டுதல்களை வெளியிட கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு தம...
Image
  ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக திரிபுரா மாநில அரசின் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில 19-11-2025 க்கு ஒத்திவைப்பு. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான திரிபுரா மாநில அரசின் மேல் முறையீட்டு வழக்கு நாளை உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலிடப்பட்ட நிலையில் ஒத்திவைப்பு. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வந்த வழக்கு 19-11-2025 க்கு  ஒத்திவைப்பு.
Image
  ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள்: படிப்படியாக நிரப்ப நடவடிக்கை-அமைச்சர் மதிவேந்தன் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 10 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் இன்று (அக்டோபர் 12) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. லட்சுமணன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், மாநில துப்புரவு பணியாளர் நல வாரியம் உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் அவர்கள் கூறியதாவது: "ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு என்பது தவறான தகவல் ஆகும். தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்குத் தனி கவனம் செலுத்தி கூடுதல் நிதி ஒதுக்கி, பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்து வருகிறது.  ஆதிதிராவிடர் ...
Image
  பேராசிரியர் காலி பணியிடம்: உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் உறுதி அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் காலி பணியிடங்கள் இல்லை என்ற நிலையை எட்டுவதற்கான முயற்சிகளை உயர் கல்வித் துறை எடுத்து வருவதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தஞ்சாவூரில் நடைபெற்ற முதல்வர் கோப்பை மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற நாமக்கல் மாவட்ட அணிக்கு ரூ.13.50 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலை, 2, 3-வது இடங்களை முறையே பெற்ற திருவாரூர் மாவட்ட அணிக்கு ரூ.9 லட்சம், தென்காசி மாவட்ட அணிக்கு ரூ.4.50 லட்சம் காசோலைகளை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் புதிதாக 34 அரசுக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 64 கல்லூரிகளில் 2 ஷிப்ட் முறை, புதிய பாடத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான ஆசிரியர்கள் தேவையை உணர்ந்து 2,703 பேரை நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் 2,700 நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க ...