Posts

Showing posts from September 29, 2025
Image
  ஒத்திவைக்கப்பட்ட எஸ்.ஐ தேர்வு டிசம்பர் 21-ல் நடைபெறும்; தேர்வு வாரியம் அறிவிப்பு  1299 காலியிடங்களை நிரப்புவதற்கான காவல் உதவி ஆய்வாளர் தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் தாலுகா மற்றும் ஆயுதப்படையில் காலியாக உள்ள 1,299 காவல் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதற்கான ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் தேர்வு நடைபெறவிருந்தது. இந்தநிலையில், காவலர் காலிப்பணியிடங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பினால், சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது. எனவே, ஜூன் மாதம் நடைபெறவிருந்த தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் தேர்வ...
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு மனுத்தாக்கல் அரசுக்கு டிட்டோஜாக் நன்றி ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மறு சீராய்வுமனு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு நன்றி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் அமைப்பின் மாநில உயர் மட்டக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், டிட்டோஜாக மாநில உயர் மட்டக் குழுவின் சுழல் முறைத் தலைவர் இரா.தாஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் டிட்டோஜாக இணைப்புச் சங்கங்களின் 12 பொதுச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதி மன்றத் தீர்ப்பின் காரணமாக இந்தியா முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தற்போது ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தில் ஒன்றிய அ...
Image
  7267 ஆசிரியர்கள் தேவை; மத்திய அரசுப் பணி; தமிழ்நாட்டிலும் வாய்ப்பு; விண்ணப்பிக்க தயாரா? பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான EMRS ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செயல்படும் 400 ஏக்லவ்யா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் (EMRS) 7267 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 23 ஆகும். பள்ளி முதல்வர் காலியிடங்களின் எண்ணிக்கை: 225 கல்வித் தகுதி: Master's Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும். மேலும் 12 வருட பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம்: ரூ. 78,800 - 2,09,200 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலியிடங்களின் எண்ணிக்கை: 1460 English - 112 Hindi - 81 Maths - 134 Chemistry - 169 Physics - 198 Biology - 99 History - 140 Geography - 98 Commerce - 120 Economics - 155 Computer - 154 கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பா...
Image
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.. ஆப்சென்ட் மட்டும் இத்தனை பேரா? தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு (TNPSC Group 2 Exam) இன்று தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. தேர்வுக்கு 5.53 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த தேர்வை 4,18,791 பேர் எழுதியதாகவும், 1,34,843 பேர் தேர்வு எழுத வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவை தொடர்பான கேள்விகளும் இந்த தேர்வில் கேட்கப்பட்டு இருந்தன. இன்று நடைபெற்ற தேர்வை சுமார் 75 சதவீதம் பேர் எழுதியிருப்பதால், ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட 650 பேர் போட்டி போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. குரூப் 1, 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு பிரிவு உதவியாளர், வனவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி சார்பில், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள...