Posts

Showing posts from October 17, 2025
Image
  சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எதற்கு? ஆசிரியர்கள் குழப்பம்- சட்டசபையில் சிறப்பு சட்டமியற்ற கோரிக்கை! தகுதித் தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் '5 ஆண்டுகளில் ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்களை தவிர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் முடியும்" என்றது. இதன் மூலம் 2011 தகுதித் தேர்வுக்கு முன்பாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணியில் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர் சங்கங்கள், கல...
Image
  2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்! 2,708 உதவிப் பேராசிரியா்கள் நேரடியாக நியமனத்துக்கான புதிய அறிவிக்கை டிஆா்பி சாா்பில் வியாழக்கிழமை (நேற்று) வெளியிடப்பட்டது. இதுகுறித்து தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் நிரப்ப கடந்த அக். 7- ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் வியாழக்கிழமை (அக். 16) வெளியிட்டது. இதில் சேர விரும்புவா்கள் ஏற்கெனவே முந்தைய அறிவிப்பின் கீழ் விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதேநேரம், ஏற்கெனவே தோ்வுக் கட்டணம் செலுத்தியுள்ளதால், தற்போது மீண்டும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்தை இன்று அக். 17 முதல் நவ. 10-க்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். டிச. 20-இல் தோ்வு நடத்த உத்த...