திட்டமிட்டபடி அக்டோபர் 12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு - TRB அறிவிப்பு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான எழுத்துத் தோ்வு அக்டோபர் 12-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (TRB) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1), கணினி பயிற்றுநா் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி எழுத்துத்தோ்வு அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து தோ்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் அப்பாடங்களுக்கு தயாராகும் வகையில் 3 வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதிகள், முதுநிலை ஆசிரியா் தோ்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலி...