Posts

Showing posts from September 24, 2025
Image
  புதுச்சேரி வானொலியில் அறிவிப்பாளர், தொகுப்பாளர் பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை இதுதான்!   புதுச்சேரி வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக புதுச்சேரி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி பிரிவுத் தலைவர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; புதுச்சேரி வானொலி மற்றும் ரெயின்போ எப்.எம் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, பகுதி நேர அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு வயது வரம்பு 2025 செப்டம்பர் முதல் தேதி உள்ளபடி 20 முதல் 50 வரையிலும், பகுதி நேர ஆர்.ஜே., பணிக்கு 20 வயது முதல் 40 வரையிலும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்க...
Image
  881 கௌரவ விரிவுரையாளர்கள் உடனே பணி நியமனம்- உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்  அறிவிப்பு தமிழக அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை 24.09.2025 அன்று தொடங்கவுள்ளது. மாணாக்கர்களின் கல்வி சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் 2025-26ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக தெரிவு செய்ய இன்று (24.09.2025) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-26ஆம் கல்வியாண்டில் ஏழை எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும் என்பதற்காக பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.   மேலும், ஏழை எளிய மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் கா...
Image
  தமிழகம் முழுவதும் செப்.29ல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! தமிழகம் முழுவதும் செப்.29ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2009 மே 31ம் தேதி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வகையான ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ம் தேதி பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்திருப்பதால் சுமார் 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பள முரண்பாடு கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த முரண்பாட்டை களைய கோரி பல்வேறு போராட்டங்களை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.) நடத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.   இது குறித்து...
Image
  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை உயர்நீதிமன்ற அறிவுரையின்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் வாரியம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பெறப்பட்டன. முதலில் தேர்வு செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் டிஎன்பிஎஸ்சி குருப்-2 தேர்வு நடைபெறுவதால் தேர்வு தேதி அக். 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வில் கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயாராக 3 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், முதுகலை ஆசிரியர் தேர்வ...