Posts

Showing posts from October 7, 2025
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் என மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக பார்க்கலாம். குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு வரும் 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. மொத்தம் 32 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விரிவான விவரங்களை பார்க்கலாம். பணியிடங்கள் விவரம் உதவி பிரிவு அலுவலர்: 22, உதவி பிரிவு அலுவலர் (நிதி): 03 உதவியாளர் (தலைமை செயலகம்): 5 உதவியாளர் (நிதி): 2 என மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 01.07.2025 தேதிப்படி அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்) பட்டியல் பழங்குடியின உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. கல்வி...
Image
  2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். உயர்கல்வியில் தமிழ்நாடு என்றென்றும் முதன்மை இடத்தில் திகழ பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:- "மருத்துவமும் உயர்கல்வியும் தனது இரு கண்களாகக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதன் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். உயர்கல்வியில் நமது மாணவர்கள் என்றென்றும் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்பதற்காகவும் தொழில்நுட்பத் துறையில் உலக நாடுகளுக்கிடையே உள்ள போட்டியிலே வென்றெடுக்க நமது மாணவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வேலை தேடுபவ...
Image
  ஆசிரியா் தகுதித் தோ்வு: மறு சீராய்வு மனு தாக்கல் செய்த அரசுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றம் ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறு சீராய்வு செய்ய மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் புரட்சித்தம்பி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் சகாயதைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா். மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ் சிறப்புரையாற்றினாா். மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் சிங்கராயா், ரவி, மாவட்ட துணைத் தலைவா்கள் சேவியா் சத்தியநாதன், அமலசேவியா், மாவட்ட துணைச் செயலா் பஞ்சுராஜ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பாக உச்சநீதிமன்றத் தீா்ப்பு சம்பந்தமாக தமிழ்நாடு அர...
Image
  தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி, தொழிற் கல்வி பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களை முந்தைய அரசுகள் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி உள்ளது. அந்த அரசாணையை பின்பற்றி தற்போது பகுதிநேர ஆசிரியர்களாக அதே பாடங்களில் பணிபுரியும் அனைவரையும் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் அரசின் பல்வேறு துறைகளிலும் பகுதிநேர பணியாளர்களாக தற்காலிகமாகவும், தொகுப்பூதியத்திலும், தினக்கூலி அடிப்படையிலும் பணிபுரிந்த துப்புரவு பணியாளர்கள், மணியகாரர், தலையாரி, எழுத்தர், நூலகர் என பலர் பின்னர் காலமுறை சம்பளத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் உள்ளது. இதுபோன்ற முன் உதாரணங்களை அரசாணைகளை பகுதிநேர ஆசிரியர்களை பணி...