13 July 2025

 இன்னும் 10,000 பேரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு குரூப்-2, 2ஏ தேர்வு அறிவிப்பு நாளை மறுநாள் வெளியீடு: சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி




சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பொறுத்தவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கடந்தாண்டு 10,701 பேர் பணியமர்த்தப்பட்டனர்.


இந்தாண்டு ஜூன் மாதம் வரை 11,027 பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு 4,300 பேர் அடுத்த இரண்டு மாதங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைப்படி தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.


இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் வரக்கூடிய அறிவிப்பின்படி இன்னும் 10 ஆயிரம் பேரை ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியிடப்படும். இந்தாண்டு தேர்வுக்கான கால அட்டவணைபடி உரிய முறையில் தேர்வுகளை நடத்திவிட்டோம். குரூப் 4 தேர்வு தாளை திருத்துவதற்கான கணினி மையம் உள்ளது. ஏற்கனவே, 3 மையம் இருந்த நிலையில், அதனை 6 மையமாக அதிகரித்துள்ளோம். இதனால் 1 லட்சம் தேர்வு தாளை திருத்தலாம்.


பலவிதமான இடஒதுக்கீடு உள்ளதால் அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்வோம். தேர்வு தாளை திருத்துவது என்பது ஒரு மாதத்தில் திருத்திவிடலாம் ஆனால், இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு என்பது இரண்டு மூன்று மாதங்களாகிவிடும். தேர்வுக்கான கேள்விகள் ரகசியமாக தேர்வு செய்யப்படுகிறது. யாராலும் பார்க்க முடியாது. சர்ச்சைக்குரிய மற்றும் அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என தேர்வு வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய மற்றும் அரசியல் கேள்விகளை கேட்பவர்கள் கேள்வி உருவாக்கும் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.


அதிக அளவில் தேர்வர்கள் இருப்பதால் வட்டார அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. காவல்துறையின் பாதுகாப்பு, கேமரா கண்காணிப்புடன் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு செல்லும் போது அதிகாரிகள் முழு கண்காணிப்பில் இருப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான முறையில் தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் எந்த இடத்திலும் வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 TNPSC GROUP 4: ஆப்சென்ட் மட்டும் இத்தனை லட்சம் பேரா? கட் ஆப் எப்படி இருக்கும்? ஒரு இடத்திற்கு எத்தனை பேர் போட்டி



விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இன்று நடைபெற்ற டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வை எழுதாமல் சுமார் 2 லட்சம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.


3,935 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் கட் ஆப் மதிப்பெண் எப்படி இருக்கும்?, ஒரு இடத்திற்கு எத்தனை பேர் போட்டி? என்பது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடைபெற்றது. விஏஒ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வர்களில் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது இந்த குரூப் 4 தேர்வுதான்.


குரூப் 4 தேர்வு


ஏனெனில், பத்தாம் வகுப்பு கல்வி தகுதி என்பதால் கடுமையான போட்டி இந்த தேர்வுக்கு உள்ளது. போட்டித் தேர்வில் தேவையான கட் ஆஃப் எடுத்தால் போதும். வேலை நிச்சயம் என்பதால் குரூப் 4 தேர்வை பல லட்சம் பேர் எழுதுகிறார்கள். இன்று நடைபெற்ற தேர்வை மொத்தம் உள்ள 3,935 பணியிடங்களுக்கு 13,89,738 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. 200 கேள்விகள் இடம் பெற்று இருந்தன.


எத்தனை பேர் ஆப்சென்ட்?


தேர்வை பொறுத்தவரையில், பிரிவு-அ-இல், தமிழ் தகுதித்தாள் தேர்வு 100 வினாக்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கும், பிரிவு-ஆ-இல் பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு தாள் தேர்வு 100 வினாக்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இன்று தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் சுமார் 2.40 லட்சம் தேர்வுக்கு வராமல் ஆப்செண்ட் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஒரு இடத்துக்கு எத்தனை பேர் போட்டி?


இதன்படி பார்த்தால் மொத்தம் விண்ணப்பித்தவர்களில் 11.48 லட்சம் பேர் (தோராயமாக) தேர்வை எழுதியுள்ளனர். மொத்தம் உள்ள காலிப்பணியிடங்களுடன் ஒப்பிட்டால் ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட 300 பேர் போட்டி போடுவதாக தெரிகிறது. கடந்த முறையை விட இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் பலரும் கூறினார். குரூப் 1, 2 , 2 ஏ தேர்வு வினாத்தாள் போல இருந்ததாக தேர்வர்கள் சிலரும் கூறுவதை பார்க்க முடிந்தது.


கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு வரும்?


கடினமாக இருந்ததாக தேர்வர்கள் பலரும் கூறியதை வைத்து பார்க்கும் போது இந்த முறை கட் ஆப் குறைய வாய்ப்பு உள்ளது. அது போக குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் தற்போது 3,935 என அறிவிக்கப்பட்டாலும், வரும் நாட்களில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா?


இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரும் இதே கருத்தையே கூறினார். இதனால், அரசின் துறைகளில் இருந்து வரும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப குரூப் 4 பணியிடங்கள் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வின் போது 6,244 ஆக இருந்தது, ஆனால் பின்னர் இது படிப்படியாக 9,532 ஆக அதிகரிக்கப்பட்டது.


எனவே நடப்பு ஆண்டிலும் குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தேர்வர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். தேர்வு முடிவுகளை மூன்று மாதத்திற்குள் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. எனவே அக்டோபருக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

 TNPSC Group 4 Exam Analysis: குரூப் 4 தேர்வா? குரூப் 1 தேர்வா? குழம்பிய தேர்வர்கள்!



டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.


இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குரூப் 4 தேர்வு, குரூப் 1 தேர்வு போல் இருந்ததாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


தமிழ் பகுதியில் கேள்விகள் குரூப் 2 அளவில் இருந்தன. மேலும் பாடப் புத்தகத்தை தாண்டி, பாடத்திட்டம் அடிப்படையில் சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கணித கேள்விகள் எளிமையானதாக இருந்தாலும் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதாக இருந்தன என்று நிபுணர் ஒருவர் தனது சமூக ஊடக பக்கத்தில் கூறியுள்ளார்.


பொது அறிவு கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. பாடப் புத்தகத்தை தாண்டி கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. தமிழ் பகுதியிலும் வினாக்கள் பாடப் புத்தகத்தை தாண்டி கேட்கப்பட்டு இருந்தன. பாடத்திட்டத்தை இலக்கியத்திலிருந்து இலக்கணமாக மாற்றியதால் சிரமமாக இருந்தது. கேள்விகள் நீளமானதாக இருந்தன. கூற்று - காரணம் அடிப்படையிலான கேள்விகள் அதிகம் இடம்பெற்று இருந்தன. கேள்விகள் கடினமாக இருந்ததால், கட் ஆஃப் மதிப்பெண் கணிப்பது கடினம். வினாத்தாள் புதுமையான முறையில் இருந்ததால் கட் ஆஃப் மதிப்பெண்களை கணிக்க முடியாது என அட்டா 24 தமிழ் யூடியூப் சேனலில் நிபுணர் விளக்கியுள்ளார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...