Posts

Showing posts from July 13, 2025
Image
  இன்னும் 10,000 பேரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு குரூப்-2, 2ஏ தேர்வு அறிவிப்பு நாளை மறுநாள் வெளியீடு: சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பொறுத்தவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கடந்தாண்டு 10,701 பேர் பணியமர்த்தப்பட்டனர். இந்தாண்டு ஜூன் மாதம் வரை 11,027 பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு 4,300 பேர் அடுத்த இரண்டு மாதங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைப்படி தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் வரக்கூடிய அறிவிப்பின்படி இன்னும் 10 ஆயிரம் பேரை ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியிடப்படும். இந்தாண்டு தேர்வுக்கான கால அட்டவணைபடி உரிய முறையில் தேர்வுகளை நடத்திவிட்டோம். குரூப் 4 தேர்வு தாளை திருத்துவதற்கான கணினி மையம் உள்ளது. ஏற்கனவே, 3 மையம் இருந்த நிலையில், அதனை 6 மையமாக அதிகரித்துள்ளோம். இதனால் 1 லட்சம் தேர்வு தா...
Image
  TNPSC GROUP 4: ஆப்சென்ட் மட்டும் இத்தனை லட்சம் பேரா? கட் ஆப் எப்படி இருக்கும்? ஒரு இடத்திற்கு எத்தனை பேர் போட்டி விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இன்று நடைபெற்ற டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வை எழுதாமல் சுமார் 2 லட்சம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். 3,935 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் கட் ஆப் மதிப்பெண் எப்படி இருக்கும்?, ஒரு இடத்திற்கு எத்தனை பேர் போட்டி? என்பது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடைபெற்றது. விஏஒ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வர்களில் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது இந்த குரூப் 4 தேர்வுதான். குரூப் 4 தேர்வு ஏனெனில், பத்தாம் வகுப்பு கல்வி தகுதி என்பதால் கடுமையான போட்டி இந்த தேர்வுக்கு உள்ளது. போட்டித் தேர்வில் தேவையான கட் ஆஃப் எடுத்தால் போதும். வேலை நிச்சயம் என்பதால் குரூப் 4 தேர்வை பல லட்சம் பேர் எழுதுகிறார்கள். இ...
Image
  TNPSC Group 4 Exam Analysis: குரூப் 4 தேர்வா? குரூப் 1 தேர்வா? குழம்பிய தேர்வர்கள்! டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குரூப் 4 தேர்வு, குரூப் 1 தேர்வு போல் இருந்ததாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ் பகுதியில் கேள்விகள் குரூப் 2 அளவில் இருந்தன. மேலும் பாடப் புத்தகத்தை தாண்டி, பாடத்திட்டம் அடிப்பட...