Posts

Showing posts from July 19, 2025
Image
 ' வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றுக' - சென்னையில் 12 வது நாளாக 3,000+ பகுதிநேர ஆசிரியர்கள் திரண்டு பேரணி! பணிநிரந்தர கோரிக்கைக்காக 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் இன்று சென்னையில் பேரணி நடத்தினர். இதில், 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டு பங்கேற்றனர். அரசுப் பள்ளிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் எனத் தேர்தல் வாக்குறுதி (வாக்குறுதி எண் 181) அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், திமுக 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்க...
Image
  அரசுப் பள்ளி காலிப் பணியிடங்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன 10 முக்கிய அம்சங்கள் கள்ளக்குறிச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், விரைவில் அரசுப் பள்ளிகளில் இருக்கும் 2 ஆம் நிலை ஆசிரியர் பணிகளுக்கான 2,340 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுகுறித்து முழு விவரங்களை பார்ப்போம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய முக்கிய அம்சங்கள்: - ஆசிரியர் நியமனங்கள் என்பது பெரிய ஆசை. - தமிழக முதல்வர் (மு.க. ஸ்டாலின்) ஆசிரியர்களை நியமனம் செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். - அது மாநிலத்தின் பள்ளிக் கல்வி முறைக்கு பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும். - 2011 முதல், இரண்டாம் நிலை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஒரு இடைவெளி இருந்தது. - வரவிருக்கும் நியமனங்கள் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. - தமிழக பள்ளிகளில் உள்ள காலியிடங்களை கணிசமாக நிரப்படும். - தற்போது, சுமார் 2,340 ஆச...