குரூப்-1 தேர்வு தள்ளிவைப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு சென்னை: துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜனவரி, 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி . என் . பி . எஸ் . சி . செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு : துணை கலெக்டர் , டி . எஸ் . பி ., வணிக வரித்துறை உதவி கமிஷனர் , மாவட்ட பதிவாளர் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான குரூப் -1 முதல்நிலைத் தேர்வு , வரும் , 30 ம் தேதி நடக்கும் எனவும் , இதற்கு , 6 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் , ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது . தேர்வுக்கு விண்ணப்பிக்க , 24 ம் தேதி வரை , வாய்ப்பு வழங்கப்படுகிறது . இதனால் , முதல்நிலைத் தேர்வு , ஜனவரி , 27 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது . விண்ணப்பதாரர்கள் , இணையதளத்தில் பதிவு செய்த , இரு நாட்களுக்குள் , கட்டணங்களை செலுத்த வேண்டும் . இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார் . மொத்தமுள்ள 25 காலி பணியிடங்களுக்கு , ஏற்கனவே , 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் . தற்போது , தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் , மேலும் , 30 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என , எதிர்பார்க்கப்படுகிறது

Comments

Popular posts from this blog