இன்னும் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி... அடுத்த TET இல் வெற்றி பெறுவோருக்கு அருமையான வாய்ப்பு.

இந்த TET தேர்வில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் முதலில் 5800 என்றே காட்டப்பட்டன. பிறகு அது 8500 ஆக இருந்து - முடிவாக அனைவருக்கும் பணிநியமனம் செய்யப்பட்டனர்.

 ஆனால் கலந்தாய்வில் வெளியிடப்பட்டுள்ள பணியிடங்களை பார்க்கும் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 750 பணியிடங்களாவது காலியாக இருப்பதாகவே தோன்றியது. எனவே முழுவதுமாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் இந்த முறை வெளியிடப்பட்டுள்ளன. 

இதில் பாதிக்கு பாதி.. அதாவது 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே இந்தTET தேர்வில் நிரப்பப்பட்டுள்ளன.எனவே அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி வெற்றி பெறுவோருக்கு அருமையான வேலைவாய்ப்பு நிலை உருவாகி உள்ளது. மேலும் 1:30 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தினால் இத்தகைய ஆசிரியர் பணிநியமன காலி இடங்கள் உருவாகி உள்ளன. 

எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த TNTET தேர்வினில் வெற்றி பெற முடியாதவர்கள் அடுத்த TET தேர்வில் தேர்ச்சி அடைந்து பணியிடங்களை பெற்று கொள்ளுமாறு இந்த வலைபூ மூலம் உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். 

அதே போல பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் பாதிக்கு பாதி காலியாக உள்ளன. அதனை உணர்ந்து இந்த 4 மாதத்தில் கடுமையாக உழைத்தால் ஒரு ஆசிரியாகும் உங்கள் கனவுகளை அடைந்து விடலாம் என்பது திண்ணம்.

Comments

Popular posts from this blog