முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!...
பெரிதும் எதிர்பார்க்கப்படும் முதுகலை பட்டதாரி போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . பல்வேறு வழுக்குகள் காரணமாக தாமதமாகி வரும் இறுதி முடிவு வெளியீடு விரைவில் வெளியாகும் என தொடர்ந்த பல நிலைகளிலிருந்த்து தகவல்கள் வந்தவண்ணம் இருப்பதால், விரைவில் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும், எப்போது முடிவுகள் வெளியாகும் என உறுதியாக தகவல் இல்லை. முடிவுகள் வெளியானவுடன் நம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment