TRB - TET - ONLINE கலந்தாய்வு எந்த மாவட்டத்தில் கலந்துக்கொள்வது ?
பட்டதாரி ஆசிரியர்கள் :
பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை TET தேர்விற்கு நீங்கள் அளித்த வீட்டு முகவரியே (Communication Address) உங்களுடைய முகவரியும் மாவட்டமும் ஆகும். அதாவது உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற மாவட்டமே உங்கள் மாவட்டமாகும். அந்த மாவட்ட கலந்தாய்வில் தான் தாங்கள் கலந்து கொள்ளவேண்டும். உங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மாவட்டத்தை பொருட்படுத்த தேவையில்லை.
இடைநிலை ஆசிரியர்கள்:
இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை எந்த மாவட்டத்தில் நீங்கள் உங்கள் ஆசிரியர் பயிற்சி கல்வித்தகுதியினை எந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளீர்களோ, அந்த மாவட்டம் தான் நீங்கள் கலந்தாய்வில் பங்கேற்கவேண்டிய மாவட்டமாகும். இதில் வீட்டு முகவரியை (Communication Address)பொருட்படுத்த தேவையில்லை .
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment