"புளூபிரின்ட்"படி கேள்விகள் கேட்கவில்லை: சாதாரண மாணவர்களுக்கு, 15 மதிப்பெண்,"கட்"
சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த கணித தேர்வில், "புளூபிரின்ட்" (கேள்வித்தாள் அமைப்பு) படி, கேள்விகள்கேட்கவில்லை எனவும், இதனால், சாதாரண மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, 15மதிப்பெண்கள் வரை, பாதிப்பு ஏற்படும் எனவும், கணித ஆசிரியர்கள், ஆவேசமாக தெரிவித்தனர்.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வு துவங்கியதில் இருந்து, தொடர் குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதனால், மாணவர்களும், பெற்றோர்களும், அடுத்தடுத்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் ஆகிய இருதேர்வுகளிலும், குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், நேற்று கணிதத் தேர்வு நடந்தது. இந்த தேர்வாவது, குளறுபடி இல்லாமல் நடக்குமா என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இதிலும் குளறுபடி நடந்து, மாணவர்களை, மேலும் கவலை அடையச் செய்துள்ளது.
எந்தெந்த பாடத்தில் இருந்து, எத்தனை கேள்விகள் கேட்கப்படும், எத்தனை மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும் என்பது குறித்து, முன்கூட்டியே அட்டவணை தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இதுதான், "புளூபிரின்ட்&' என, அழைக்கப்படுகிறது.
இதில், உள்ள கேள்விகள் அமைப்பின்படியே,காலாண்டு, அரையாண்டு, மாதிரி தேர்வுகள், பொதுத்தேர்வுகள் என, அனைத்திற்கும் கேள்விகள் கேட்க வேண்டும். பொதுத்தேர்வுக்கு சற்று முன் நடந்த மாதிரித் தேர்வுகளில், கணிதபாட தேர்வில், "புளூபிரின்ட்" படியே, கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆனால், நேற்று நடந்த மிக முக்கியமான பொதுத் தேர்வில், கேள்வித்தாள் அமைப்பின்படி, பல கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும், இதனால்,"ஆவரேஜ்" மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும், கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், கணித ஆசிரியர்கள் குமுறினர். 15 மதிப்பெண்கள் வரை, அவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
கணித ஆசிரியர்கள் சரமாரி கேள்வி: "பிதாகரஸ்" தேற்றம், தொடுகோடு நாண் தேற்றம் ஆகிய பகுதிகளின் கீழ், "நிரூபணம் இன்றி" என, தரப்பட்டுள்ளது.
இந்த பகுதி கேள்விக்கான விடையை எழுதும் போது, சான்று அளிக்க தேவையில்லை. அதன்படி, இந்த பகுதி, இரு மதிப்பெண் கேள்வியில் மட்டுமே கேட்கப்படுகிறது. ஐந்து மதிப்பெண் கேள்வியில், கேட்டது கிடையாது. அதனால், நாங்களும் நடத்தவில்லை. ஆனால்,"பிதாகரஸ் தேற்றம் எழுதி நிரூபி" என, ஐந்து மதிப்பெண் பகுதியில், கட்டாய கேள்வியாக கேட்டுள்ளனர்.
"புளூபிரின்ட்"படி, இந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது. மாணவர்கள், கோர்ட்டுக்குச் சென்றால், தேர்வுத்துறை, பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும். பிதாகரஸ் தேற்றம் பகுதிக்கு,சான்று இருப்பதாகவும், இது, ஐந்து மதிப்பெண் பகுதிகளில் இடம்பெறும் என்றும், கடைசிவரை, தேர்வுத்துறை கூறவில்லை.
இது, தேர்வுத்துறையின் தவறு."புளூபிரின்ட்" விதிக்கு மாறாக, கேள்வியை கேட்டுள்ளனர்."புளூபிரின்ட்"படி, "கணங்களும், சார்புகளும்" என்ற பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண் பகுதியில், இரு கேள்விகள் கேட்க வேண்டும். கணங்கள் பகுதியில், 3 பயிற்சிகளும், சார்புகள் பகுதியில், ஒரு பயிற்சியும் உள்ளன.
கணங்கள் பகுதி, எளிதானவை. மேலும், அதிக பயிற்சிகள் உள்ள பகுதி. கணங்களில் இருந்து, ஒரு கேள்வியை கூட கேட்காமல், சார்புகள் பகுதியில் இருந்தே, 2 கேள்விகளையும் கேட்டுவிட்டனர்.
இரண்டாவது பாடத்தில் (மெய் எண்களின் தொடர் வரிசைகளும், தொடர்களும்) இருந்து, இரண்டு, ஐந்து மதிப்பெண் கேள்விகள், "புளூபிரின்ட்&'படி கேட்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு கேள்விதான் (கேள்வி எண்:33) கேட்டுள்ளனர்.
"அல்ஜீப்ரா" பாடத்தில் (மூன்றாவது பாடம்) இருந்து, மூன்று ஐந்து மதிப்பெண் கேள்விகள் கேட்க வேண்டும். ஆனால், இரண்டு தான் கேட்டுள்ளனர். ஒரு கேள்வியை கேட்கவில்லை. "அணிகள்" (நான்காவது பாடம்) பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண் கேள்வியில், ஒரு கேள்வி கேட்க வேண்டும்.
இதற்கு மாறாக, இரு கேள்விகளை கேட்டுள்ளனர். இதேபோல்,"முக்கோணவியல்" (ஏழாவது பாடம்) பாடத்தில் இருந்து, ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி கேட்க வேண்டும். இதற்கு மாறாக, இரு கேள்விகளை கேட்டுள்ளனர்.
இப்படி, "புளூபிரின்ட்"டிற்கு மாறாக, பல கேள்விகளை கேட்டதன் மூலம், "ஆவரேஜ்"மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், 15 மதிப்பெண்கள் வரைஇழப்பு ஏற்படும். இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment