ஜூன் 9ல் மாவட்டங்களில் பேரணி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு
திருவண்ணாமலை: 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 9ல் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் பேசியதாவது:இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை வரும் கல்வி ஆண்டில் முழுமையாக நிரப்ப வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை தீர்ப்பதற்காக தமிழக அரசு மூவர் குழுவை நியமித்தது. அந்த குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களுடன் பரிந்துரைகள் குறித்து பேச்சு நடத்தி உரிய தீர்வுகளை காண அரசு முன்வர வேண்டும்.ஆசிரியர் மன்றத்தின் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 9ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும். இவ்வாறுஅவர் பேசினார்.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment