ஜூன் 9ல் மாவட்டங்களில் பேரணி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு
திருவண்ணாமலை: 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 9ல் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் பேசியதாவது:இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை வரும் கல்வி ஆண்டில் முழுமையாக நிரப்ப வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை தீர்ப்பதற்காக தமிழக அரசு மூவர் குழுவை நியமித்தது. அந்த குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களுடன் பரிந்துரைகள் குறித்து பேச்சு நடத்தி உரிய தீர்வுகளை காண அரசு முன்வர வேண்டும்.ஆசிரியர் மன்றத்தின் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 9ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும். இவ்வாறுஅவர் பேசினார்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment