ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - சில குறிப்புகள்
1.ரூ .50 ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் , தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல்
01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
2. தேர்வு கட்டணம்:
ஒவ்வொரு தாளுக்கும் ரூ .500
எஸ் . சி / எஸ்டி பிரிவினருக்குரூ .250 மாற்றுதிரனாளிகளுக்கு ரூ .250
3. விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்
4. பாரத் ஸ்டேட் வங்கி , கனரா வங்கி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில் பணம் செலுத்தலாம் ,
5 டி . ஆர் . பி நகல் என குறிப்பிடப்பட்ட சலான் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கப்படவேண்டும்
6. ஓ , எம் , ஆர் எனப்படும் வினண்ணப்பத்தில் மட்டுமே கோரப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்
7. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 01.07.2013 மாலை 5.30 க்குள்ளாக நேரில் சமர்பிக்கப்பட வேண்டும் .
8. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலில் , விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான ஒப்புகை கட்டாயம் பெற அறிவிக்கப்பட்டுள்ளது . 9. ஆன்லைன் , தபால் , பேக்ஸ் , கூரியர் போன்ற வழிகளிலும் , ஜெராக்ஸ் நகலில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ( டி ஆர் பி மையம் அல்லது வேறு அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டால் ) நிராகரிக்கப்படும்.
10.B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE
11. 10+2+3 கல்விமுறை அவசியம்
12. ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை
13. தற்போது தனியார் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்- 23/8/2010 அன்றோ அதற்கு பிறகு நியமன ஆனண பெற்றிருப்பின் தேர்வு எழுதி கட்டாயம் 5 ஆண்டுக்குள் தேற வேண்டும்.
14.தற்போது தேர்வில் வெற்றிபெறுவோர் அனைவருக்கும் 7 ஆண்டுகள் செல்லத்தக்க ஆசிரியர் தகுதிசான்று வழங்கப்படும்.
15.தகுதிசான்று பெற்றவர்களுக்கு தனியாக வெயிட்டேஜ் (அரசு ஆணையின் படி)அடிப்படையில் பணிஆணைகள், இடஓதிக்கீடு மற்றும் காலிப்பணியிடத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.
16.D.T.Ed., தகுதிபெற்றோர் தாள்-1,, B.Ed., தகுதிபெற்றோர் தாள்-2,க்குண்டான தேர்வுகள் எழுதலாம்,
17.இரண்டு தாள்களும் எழுத தகுதி பெற்றோர் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனி விண்ணப்பங்களில் விண்ணப்பித்து, ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்தி தேர்வுகள் எழுத வேண்டும்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment