ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்டஆசிரியர்கள் 2013-14ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. 

இது குறித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில் கடந்த டிசம்பர் 2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது எனவும், பொதுவாக புதிய நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமனம் தேதி முதல் குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்என்பது விதி.

 எனவே டிசம்பர் 2012ல்நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்இம்மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் பெற தகுதியில்லை, இதுகுறித்து மாவடத் தொடக்கக் கல்வி அலுவலகத்திலும் கேட்டு உறுதி செய்யப்பட்டதுஎன தெரிவித்தார்.

எனினும் இதுகுறித்து நமது TNKALVI சார்பாக மேற்படி ஐயங்களுக்கு விடை காண தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விரைவில் மேற்படி தகவல்கள் குறித்த நிலை நமது வலைத்தளத்தில் தெரிவிக்கப்படும். Thanks to kalviseithi.com

Comments

Popular posts from this blog