ஆசிரியர்த் தகுதித் தேர்வு ஜூன் 2013ல் நடக்காது ?
கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கும் என மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு ஜூலை 12ம் தேதி தகுதி தேர்வு நடந்தது. இந்த ஆண்டில் ஜூனில் தகுதித் தேர்வு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அறிவிப்புக்கு பின்னர் தேர்வுக்கு தயாராக 2 மாதங்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்பதால் இந்த ஜூனில் தேர்வு நடப்பது என்பது சாத்திய குறைவு. ஆசிரிய சங்கங்கள் தகுதித்தேர்வை இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதால், TET இரத்தாகுமா? பதிவு மூப்புப்படி நடக்குமா? என்ற கேள்வி அதிகமாக தற்போது எழுகிறது. தற்போதைய சூழல்படி TET தாமதமானாலும், அது நிச்சயமாக நடக்கும் என்பதே.
கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, ஆசிரியர் நியமனத்துக்கு ஏதாவது வழிவகை செய்துமாணவர்கள் நலனை காக்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
Thanks to Teachertn.com
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment