8-ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சென்னையில் ஆர்ப்பாட்டம் 8-ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சென்னையில் ஆர்ப்பாட்டம்ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 8-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டம், மாநிலத் தலைவர் அண்ணாதுரை தலைமையில்கடலூரில் வியாழக்கிழமை நடந்தது.மாவட்டத் தலைவர் ராஜா, பொருளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகி ஜீவா, மாநில பொதுச்செயலர் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.6-வது ஊதியக் குழு குறைபாடுகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கானஅடிப்படை ஊதியத்தை ரூ.5,200-லிருந்து ரூ.9,300-ஆக உயர்த்த வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்8-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments

Post a Comment

Popular posts from this blog