ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பணியிடம் விரைவில் நிரப்ப நடவடிக்கை
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்(ஆர்.டி.ஓ.,) காலி பணியிடங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி, 1.70 கோடி வாகனங்கள் உள்ளன. இதில், இரு சக்கர வாகனங்கள் மட்டும், 1.41 கோடி. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாகனங்கள் பதிவு, ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், 70 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 54 பகுதி அலுவலகங்கள், 19 சோதனை சாவடிகள் உள்ளன. புதிய வாகனங்களின் பதிவு, வாகனங்கள் உரிமம் புதுப்பித்தல், வாகனங்களின் ஆய்வு, ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள், வட்டார போக்குவரத்து
அலுவகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த, 2012 - 13ம் ஆண்டில், போக்குவரத்து துறையில், உதவியாளர், 146; சுருக்கெழுத்து தட்டச்சர், 8; இளநிலை உதவியாளர், 43; தட்டச்சர், 44; அலுவலக உதவியாளர், 26; காவலர், 14, என, மொத்தம், 281 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இருப்பினும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களை பொறுத்தவரை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், 75; அலுவலக உதவியாளர், 105; கண்காணிப்பாளர், 40; உதவியாளர், 145; இளநிலை உதவியாளர், 92; உள்ளிட்ட, 600க்கும்மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இது குறித்து, போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், 15க்கும் மேற்பட்ட, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஒரு வட்டார போக்குவரத்து அலுவலர், ஒன்றுக்கு மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் பணியை, கவனித்து கொள்ள வேண்டிய நிலை நீடிக்கிறது. எனவே, காலி பணியிடங்களை, விரைவில் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக, பணியாளர் தேர்வாணையத்திற்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், காலி பணியிடங்கள் நிரப்பப்படும்' என்றார்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment