தகுதி தேர்வில் இடஒதுக்கீடு: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்  

திருநெல்வேலி: ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
 தமிழக ஆசிரியர் கூட்டணியின் மானூர் வட்டார செயற்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. 

வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் கல்வித் துறை பணியாளர்கள், ஏ.இ.ஓக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங்கை இந்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும். ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலின் நகலை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்.

 மின்னணு ஊதிய பட்டியல் தயாரிக்கும் ஆகும் செலவை அரசே ஏற்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments

Popular posts from this blog