அரசு தொடக்கப்பள்ளிகளை ஆங்கிலவழி பள்ளிகளாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பேராபத்து
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழி கல்விக்கு வேட்டு வைத்துள்ளது.
அன்னைத்தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவதாகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு, ஆங்கில மொழியில் பயில்வதற்கு ஊக்குவிப்புத்தந்து ‘‘மெல்லத்தமிழ் இனி சாகும்; மேலை மொழியே இங்கு ஓங்கும்’’ எனும் பெரும் விபரீதத்துக்கு தமிழக அரசின் முடிவு வழிவகுக்கும்.
பெற்றோர்கள் மீது பழி
தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு அரசு பள்ளிகளும் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் பயிற்று மொழி என்பதை ஏற்பதற்கில்லை. அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புவசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவிடாமல் தடுப்பது எது?
தமிழ் பயிற்றுமொழிதானா, இங்கிலீஷ் மீடியம் வேண்டும் என பெற்றோர் விரும்புகிறார்கள் என்று பொதுமக்கள் மீது பழியைப் போடாமல், தமிழ்வழிப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அத்துடன் தொடக்கப் பள்ளியில் மட்டுமல்லாமல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும், ஏன் கல்லூரி படிப்பிலும் கூட, தமிழையேபயிற்றுமொழியாக்குவது போன்ற உருப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
தாய்மொழி கட்டாயம்
அரசுப் பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தை கடைப்பிடிக்க வேண்டும். கேரளத்தில் மலையாள வழி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் தனி மதிப்பெண் கொடுப்பதுபோல் இங்கேயும் தமிழ்வழி படித்தவர்களுக்கு பல சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். கடந்த 1998–ம் ஆண்டு தமிழ்ச்சான்றோர் பேரவை தமிழண்ணல் தலைமையில் நடத்திய 102 தமிழுணர்வாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தின் முடிவில் அன்றைய தமிழகஅரசு நீதிபதி மோகன் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து, அக்குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி கட்டாய பயில்மொழியாகவும், பயிற்றுமொழியாகவும் இருக்கும் என்று ஆணையிட்டது.
மெட்ரிக் பள்ளி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அந்த அரசாணை செல்லாது என்று கூறி விட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு 1999–ல் சுப்ரீம் கோர்ட்டில் செய்த முறையீடு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து தமிழுக்கு சாதகமான தீர்ப்பு பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஆங்கில வழி வகுப்புகளை விரிவாக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழ்வழி கல்விக்கு தகுந்த முறையில் ஊக்கம் அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment