ஆசிரியர் நியமனம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்
நெல்லையில் கிருஷ்ணசாமி பேட்டி
நெல்லை, ஜூன் 11:
புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் நேற்று அளித்த பேட்டி:
சமூக ஒடுக்குமுறைக்கு ஆளான 76 சமுதாய மக்களே தாழ்த்தப்பட்ட பிரிவைசார்ந்தவர்கள் ஆவர். எஸ்சி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியையும் குறிக்காது. 76 ஜாதிகளின் உட்பிரிவைஇந்திய அரசு �சமூக நீதித்துறை� என்ற ஒரு குறிப்பிட்ட துறையின் கீழ் கண்காணித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் 76 ஜாதிகளின் உட்பிரிவுகளை கண்காணிக்கும் துறையை �ஆதிதிராவிடர் நலத்துறை� என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். பல ஜாதிகள் அடங்கிய எஸ்.சி. பிரிவுக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயரால் நலத்துறை இருப்பது கூடாது.எஸ்.சி பிரிவினருக்கு மத்திய அரசு 18% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதில் அருந்ததியர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு என்பது மாநில அரசின் வரம்பு மீறிய செயலாகும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இதில் தொடர்ந்து இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் நியமனம் குறித்து தமிழகஅரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment