டெட் தேர்வு - எதிர்க்க குழு அமைப்பு
டெட் தேர்வு எதிர்ப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று மதியம்(16.02.2013) சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் நடை பெற்றது. பாதிக்கப்பட்ட சிலர் உட்பட சுமார் 20 பேர் பங்குபெற்றனர்.
டெட் தேர்விலும் ஆசிரியர் பணி நியமனத்திலும் முறையாக இட
ஒதுக்கீட்டைக் கடைபிடிக்கப் போராடுவதற்காக "இட ஒதுக்கீட்டுப் போராட்டக் குழு" ஒன்று அமைப்பது என முடிவு செய்யபட்டது. இதில் பேரா.மு.திருமாவளவன், பேரா.ப.சிவகுமார், பேரா.அ.மார்க்ஸ் முதலான சுமார் 10 பேர்கள் முதற் கட்டமாகப் பங்கேற்கின்றனர். தங்கத் தமிழ் வேலன் இக்குழுவை ஒருங்கிணைப்பார்.
இட ஒதுக்கீட்டைத் தெளிவுபடுத்திய பின்னரும், சென்ற தேர்வில் நடைபெற்றமுறைகேடுகளைக் களைந்த பின்பே அடுத்த தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்யவும், தேசிய ஆசிரியக் கல்விக் கழகத்திடமிருந்துவிளக்கம் பெறவும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்வது எனவும், அதற்கென மூத்த வழக்குரைஞர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கைகளைத் தமிழகமெங்கும் அச்சிட்டு வினியோகிப்பது, கூட்டங்கள் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. தொடர்புக்கு :தங்க தமிழ் வேலன், 9952930165-thanks http://www.facebook.com /psivakkumarr
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment