முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, கடைசி நாளான நேற்றுடன், 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை 21ல், போட்டித் தேர்வு நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம், 31ம் தேதியில் இருந்து, நேற்று வரை வழங்கப்பட்டன. இதில், 1.5 லட்சம் விண்ணப்பங்கள் வரை விற்பனை ஆகியிருக்கலாம் என, கூறப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும், நேற்று, கடைசி நாள். நேற்றுடன், 1.42 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில் பெறப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், ஒரு சில மாவட்டங்களில், சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை என்றும், அவை கிடைத்தால், மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, மேலும் சில ஆயிரங்கள் வரை அதிகரிக்கலாம் எனவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment