முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, கடைசி நாளான நேற்றுடன், 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை 21ல், போட்டித் தேர்வு நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம், 31ம் தேதியில் இருந்து, நேற்று வரை வழங்கப்பட்டன. இதில், 1.5 லட்சம் விண்ணப்பங்கள் வரை விற்பனை ஆகியிருக்கலாம் என, கூறப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும், நேற்று, கடைசி நாள். நேற்றுடன், 1.42 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில் பெறப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், ஒரு சில மாவட்டங்களில், சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை என்றும், அவை கிடைத்தால், மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, மேலும் சில ஆயிரங்கள் வரை அதிகரிக்கலாம் எனவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment