முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, இதுவரை, 1.58 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன.
சென்னை: ஜூலை, 21ல் நடக்கும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, இதுவரை, 1.58 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,ஜூலை, 21ல், போட்டித் தேர்வு நடக்கிறது. டி.ஆர்.பி., நடத்தும் இந்த தேர்வுக்காக, கடந்த மாதம், 31ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும், விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று வரை, 1.58 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள்தெரிவித்தன. விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி கடைசி நாள். அடுத்த ஒரு வாரத்திற்கு, மேலும் சில ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 75 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment