விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 8-ம் தேதி நடைபெறுகிறது விருதுநகர் மாவட்டத்தி்ல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வருகிற 8-ம் தேதி தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன் அடிப்படையில் இசை ஆசிரியர்-11, தையல்-138, ஓவியம்-102, உடற்கல்வி-130, கணிப்பொறி-311, வாழ்க்கை கல்வி மற்றும் கட்டடப்பணி ஆசிரியர்-3 என மொத்தம் 695 பேர்கள் வரையில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 8-ம் தேதி குறிப்பிட்ட இடத்தில் காலை 10-மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை வரையில் நடைபெற இருக்கிறது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்த அனைவரும் தவறாமல் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog