விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 8-ம் தேதி நடைபெறுகிறது
விருதுநகர் மாவட்டத்தி்ல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வருகிற 8-ம் தேதி தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன் அடிப்படையில் இசை ஆசிரியர்-11, தையல்-138, ஓவியம்-102, உடற்கல்வி-130, கணிப்பொறி-311, வாழ்க்கை கல்வி மற்றும் கட்டடப்பணி ஆசிரியர்-3 என மொத்தம் 695 பேர்கள் வரையில் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 8-ம் தேதி குறிப்பிட்ட இடத்தில் காலை 10-மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை வரையில் நடைபெற இருக்கிறது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்த அனைவரும் தவறாமல் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி தெரிவித்தார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment