முதுகலை ஆசிரியர் தேர்வு: 82 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்றுடன், 82 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள். 

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்காக,3 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும், நேற்று முன்தினம் முதல், விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. 

 முதல் நாளன்று, 82 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில், 3,500 விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. நேற்று, மாநிலம் முழுவதும், 14 ஆயிரம் விண்ணப்பங்களும், விற்பனை ஆயின. 1.5 லட்சம் பேர் வரை, விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது

Comments

Popular posts from this blog