ஆண்/ பெண் அரசு பள்ளிகளில் - ஆசிரியர்கள் பாலின அடிப்படையில் நியமனம்.
மே 28 - GO No 145 இன் படி...
தமிழகத்தில் இனி அரசு ஆண்கள் பள்ளிகளில் - ஆண் ஆசிரியர்களும்
அரசு பெண்கள் பள்ளிகளில் - பெண் ஆசிரியர்களும் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.
தலைமை ஆசிரியர்கள் பெண்கள் பள்ளிகளில் பெண் தலைமை ஆசிரியராக மட்டுமே இருக்க இந்த அரசு விதியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருபாலாரும் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு முன் உரிமை அளிக்கும் படியாகவும் இந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு முடிந்துள்ளதால் அடுத்த ஆண்டு முதல் இது தீவிர அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் , இந்த TET தேர்விலும் PG TRB தேர்விலும் தேர்ச்சி அடைந்து பணியில் சேர்வோரும் இவ்விதிகளின் படியே பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment