TET - ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்

திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: TET - ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆகஸ்ட் 17,18 தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது. 

இந்த தேர்வில் தலித் மற்றும் பழங்குடியினர் பங்கேற்பதற்கும், வெற்றி பெறுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. இதில் உளவியல், ஆங்கிலம், கணிதம், தமிழ், அறிவியல், உள்ளிட்ட பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். 

 இந்த பயிற்சி வகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) காலை 10 மணிக்கு பல்லடம் காவல்நிலையம் எதிரேஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள அம்பேத்கர் பயிற்சி மையத்தில் தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.

 இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் 9659368665, 9965386569, 9443937063 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெயர்ப்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே இந்த வாய்ப்பை தலித், பழங்குடி பிரிவு மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளும்படி அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது. (நன்றி: தீக்கதிர் நாளிதழ் 31.05.2013)

Comments

Popular posts from this blog