ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் மாற்றம் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக விபுநாயர் நியமனம்

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் மாற்றப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் வகுப்பினர், சிறுபான்மையின நலத்துறை துணை செயலாளர் எஸ்.சிவசண்முகராஜா மாற்றப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைஇயக்குனராக நியமிக்கப்பட்டார். பாசன விவசாயம் நவீனமாக்குதல் மற்றும் நீர்வள மேலாண்மை திட்ட இயக்குனர் விபு நாயர் மாற்றப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக பணிபுரிந்த சுர்ஜித் கே.சவுத்ரி மத்திய அரசுபணிக்கு செல்கிறார்.விவசாயத்துறை சிறப்பு செயலாளர் அசோக் ரஞ்சன் மொகந்தி மாற்றப்பட்டு, மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சி.விஜயராஜ் குமார் மாற்றப்பட்டு தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரிய மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால்வாரிய மேலாண் இயக்குனராக பணியாற்றிய பி.ஏகாம்பரம் பணி ஓய்வு பெற்றார்.இதற்கான உத்தரவை அரசு தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog