உண்ணாவிரதப் போராட்டம் 

 கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரி சென்னை 
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது . அதன் அடிப்படையில்
உயர் நீதிமன்றம் 09.07.2013 அன்று தகுதி தேர்வு இல்லாமல் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது . ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதை காலம் தாழ்த்தி வருகிறது . எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது .

தேதி: 29.08.2013,வியாழக்கிழமை 
நேரம் :காலை 10.00 மணி முதல் மாலை  5.00 மணி வரை 
இடம் : சேப்பாக்கம் ஸ்டேடியம் எதிரில் ,சென்னை 

அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்! 

 இப்படிக்கு 
                                                                                                                சான்றிதழ்சரிபார்க்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் 

குறிப்பு : 23.08.2010க்கு முன்பு சான்றிதழ்சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் .

CONTACT : M.HARIKRISHNAN - 9443578274

Comments

Popular posts from this blog