தமிழகம் முழுவதும் 4 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதினர்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1,060 மையங்களில் நடந்தது.2 லட்சத்து 90 ஆயிரம் பெண்கள் உள்பட 4 லட்சத்து 77 ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். தமிழ் பாட கேள்விகள் தவிர மற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக பெரும்பாலானோர் தெரிவித்தனர்.

4 லட்சம் பேர் எழுதினர்
அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 62 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். 11,558 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ், கணித பிரிவுகளில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய பல ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1060 மையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிதான கேள்விகள்
தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–
கடந்த தகுதித்தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த முறை தேர்வில் கேள்விகள் எளிதாகவே இருந்தன. தமிழ் பாடத்தில் மட்டும் கேள்விகள் சற்று கடினமாக கேட்கப்பட்டன. இலக்கண பகுதியில் இருந்து அதிகப்படியான கேள்விகளை கேட்டுள்ளனர். தமிழ் ஆசிரியர்கள் வேண்டுமானால் அந்த கேள்விகளுக்கு எளிதாக விடையளித்து இருக்கலாம். மற்ற பாட ஆசிரியர்களுக்கு கடினம்தான். கல்வி உளவியல் மற்றும் இதர பாடங்களில் கேள்விகள் எளிதாகத்தான் இருந்தன.

தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
ஆங்கில பாடத்தில் கேள்விகள் சுமாராக இருந்தன. மற்றபடி கடந்த தகுதித்தேர்வுடன் ஒப்பிட்டால் இந்த தடவை தேர்வு எளிது என்றுதான் சொல்ல வேண்டும். பாடப்புத்தகத்தில் இருந்துதான் அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டு இருக்கின்றன. ஒருசில வினாக்கள் பிளஸ்–1, பிளஸ்–2 புத்தகங்களில் இருந்து கேட்டுள்ளனர்.விடையளிக்க நேரம் போதிய அளவில் இருந்தது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தமிழ் பாடத்தில் கேள்விகள் கடினமாக இருந்ததாக பெரும்பாலான ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவித்தனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்விலும்இதே கருத்தைத்தான் ஆசிரியர்கள் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேள்விகளை ஆய்வு செய்தபோது ஓரளவுக்கு படித்தால்கூட 50 சதவீத மதிப்பெண் பெற்றுவிடலாம். எஞ்சிய 10 சதவீத மதிப்பெண் எடுப்பதுதான் தேர்வில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

 தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் அதாவது 150–க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். இந்த தகுதித்தேர்வு எளிதாக இருந்ததாக பெரும்பாலான ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து இருப்பதால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

‘கீ ஆன்சர்’ எப்போது வெளியிடப்படும்?

தகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் எந்தெந்த கேள்விக்கு என்னென்ன பதில் அளித்துள்ளோம்? என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் விடைகளை சரிபார்த்து கொள்வதற்காக ‘கீ ஆன்சர்’ வெளியிடப்படுவது வழக்கம். 

கீ ஆன்சர் வெளியிடுவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம்கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும், அதைத்தொடர்ந்து தேர்வு முடிவை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog