குரூப் 4 தேர்வுக்கான ரசீதின்நகலை அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 19
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4க்கான தேர்வறை அனுமதிச் சீட்டு கிடைக்காத விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@ gmail.com என்ற மின்னஞ்சல்முகவரிக்கு 19-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பெயர், பதிவு எண், விண்ணப்பம் மற்றும் தேர்வுக்கட்டணம், கட்டணம் செலுத்தியஇடம், வங்கிக் கிளை அல்லது அஞ்சலக முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments

Popular posts from this blog