முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவு: வெளியிட தடை கோரி வழக்கு
முதுகலை தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில், அச்சுப்பிழை இருந்ததால், முடிவு வெளியிட தடை கோரி, தாக்கலான வழக்கு விசாரணையை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்தி வைத்துள்ளது.மணப்பாறை, ஆண்டனி கிளாரா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 605 முதுகலை தமிழாசிரியர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, ஜன.,27 ம் தேதி, நடந்தது. எனக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், 21 கேள்விகளில், பொருள் மாறும் வகையில், அச்சுப்பிழைகள் இருந்தன. அச்சுப்பிழை உள்ள தவறான கேள்விகளுக்கு, பதில் அளித்தவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவு வெளியிட, தடை விதிக்க வேண்டும். எனக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். நீதிபதி எஸ்.மணிக்குமார், இந்த மனு மீதான விசாரணையை, ஒத்தி வைத்துள்ளார்.

Comments

Popular posts from this blog