2012 தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற 612 பேருக்கு டிஆர்பி மீண்டும் அழைப்பு

நெல்லை: கடந்த ஆண்டு டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்ற 600க்கும் மேற்பட்டவர்களுக்கு டிஆர்பி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வு மூலம் பணி நியமனம் நடக்கிறது.

கடந்த 2012ம் ஆண்டு நடந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், இன்று வரை பல்வேறு காரணங்களுக்காக பணிநியமன உத்தரவு கிடைக்காமல் உள்ளனர்.குறிப்பாக, பிஏ ஆங்கிலத்திற்கு நிகராக கருதப்படும் பிஏ ஆங்கிலம் மற்றும் கம்யூனிகேஷன், பிஏ கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கடந்த ஆண்டு டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளி ஆசிரியர் என்ற கனவோடு நேர்காணல் வரை சென்றனர். 

ஆனால் நேர்காணலில், ‘ரிமார்க்’ என அறிவித்து பணி நியமனம் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டனர்.இதேபோல் அறிவியல் உள்ளிட்ட வேறு சில பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பணிநியமன உத்தரவு கிடைக்கவில்லை.

இது தொடர்பாக, சிலர் தொடர்ந்த வழக்கில்அவர்களது கல்வி தகுதியை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் கடந்த 25ம் தேதி உத்தரவிட்டதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 612 ஆசிரியர்களை மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருமாறு டிஆர்பி ஆன்லைன் மூலம் அழைப்பு அனுப்பி உள்ளது. இதனால் 612 ஆசிரியர்களும் இதன் மூலம் தங்களுக்கு உடனடியாக பணி நியமனை உத்தரவு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதற்கிடையே,கடந்த ஆண்டு டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு காரணங்களால் கல்வித் தகுதி சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறிய 523 பேருக்கும் டிஆர்பி மீண்டும் அழைப்பு விடுத்து, கடந்த வாரம் 2 நாட்கள் சான்றிதழ்களை சரிபார்ப்பு நடந்தது. இவர்களுக்கம் பணி கிடைக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள் ளது.

Comments

Popular posts from this blog