முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ் பாட முடிவை வெளியிட தடை

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ் பாடத்திற்கான முடிவை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை
21ஆம் தேதி தமிழ் தேர்வு நடைபெற்றது.இதில் தமிழ் தேர்வில்47கேள்விகள் தவறுதலாக இருந்ததாகவும்,இதனால் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் விஜயலட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,தமிழ் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்,இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வரும்16ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது

Comments

Popular posts from this blog