10 நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்-ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பத்து நாட்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடத்தப்பட்ட இந்ததேர்வை,சுமார் ஐந்து லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடைகள் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டன.

அந்த விடைகளுக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சபனை தெரிவித்ததையடுத்து வல்லுநர் குழு ஆய்விற்கு பிறகு அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாற்றங்களுடன் கூடிய புதிய விடைகளும் முடிவுகளும் சேர்த்தே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog