விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன்

சென்னை: குரூப் 2 தேர்வுக்கு, 6லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர்,நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து,தேர்வாணைய தலைவர்,நவநீதகிருஷ்ணன்,கூறியதாவது:குரூப் 2தேர்வுக்கு, 6லட்சத்து, 85ஆயிரத்து, 198பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணத்தை,வரும், 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு,டிச., 1ம் தேதி, 115இடங்களில் நடக்கிறது. துணை வணிகவரி அலுவலர் பணியிடத்திற்கு, 66பேர்,இந்து அறநிலையத்துறையில், "ஆடிட் இன்ஸ்பெக்டர்'பணிக்கு, 39பேர் உட்பட, 1,064பணியிடங்களை நிரப்ப,இத்தேர்வு நடக்கிறது.

குரூப்4தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது.12லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. விரைவில்,இதன் முடிவு வெளியிடப்படும். இவ்வாறு,நவநீதகிருஷ்ணன் கூறினார்.

Comments

Popular posts from this blog