முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் வழக்கு. 

 முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இட ஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இவ் வழக்கு இன்று ( அக் 18) நீதியரசர் டி எஸ் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (அக் 18)மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.

Comments

Popular posts from this blog